80-90 களின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா. தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நதியா. இப்படத்தில் நாட்டிய பேரொளி நடிகை பத்மினியின் பேத்தியாக நடித்திருப்பார். அதன்பின்னர் உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறுது காலம் இடைவெளி விட்டார். அதன்பின்னர் ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அன்று முதல் இன்று வரை இளமை மாறாமல், அப்டியே இருக்கும் நடிகை நதியாவின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்பில் மூழ்க்கியுள்ளனர்.
அனைவருக்கும் பிடித்த அழகிய தோற்றம், கவர்ச்சி இல்லாத நடிப்பு, என்றும் இளமையான தித்திக்கும் சிரிப்பு என ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றுவரை எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நதியா. இந்நிலையில் லாக்டவுனில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அவரின் மகளைவிடவும் நதியா இளமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
Feels good when your kids still find you funny?? #TBT #ThrowBackThursday