தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உடல்நலக் குறைவால் காலமானார். எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது. அவரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இளைய தளபதி விஜய் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். ஆனால் அஜித் சினிமாவில் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்.பி.பிக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. கொரோனா காரணம் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள்.
சிறு சிறு விளம்பரங்களில் நடிக்கும் போது சரணின் உடைகளை தான் அஜித் போட்டு செல்வாராம். அஜித்திற்கு முதல் படமான பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பே எஸ்.பி.பி அவர்களால் தான் கிடைத்தது. அப்படி உதவியவருக்கு ஒரு இரங்கல் செய்தி கூட கொடுத்தவில்லையே என்பது பலரின் ஆதங்கம்.