12 வயது சிறுமி ஒருவர் பல்லடம் பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக வயிற்றில் கடுமையான வலி இருந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கலக்கத்தில் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை பின்பற்றிய போதிலும் சிறுமியால் வலியிலிருந்து விடுபட இயலவில்லை. இந்நிலையில், மருத்துவர்கள் சிறுமியின் வயிற்றை சோதித்து பார்த்தபோது, வயிறு லேசாக வீங்கியிருந்தது போன்று தெரியவந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததை மருத்துவர்கள் அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். சிறுமியை யாரோ ஏமாற்றி தவறான விஷயம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தார் முழுவதுமாக வீட்டிற்கு வந்த பின்னர் விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த இப்படிப்பட்ட சோகமான செயலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.