தண்டவாளத்தில் இறங்கி நூலிழையில் உயிர் தப்பிய பயணி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்த பதிவு மும்பையில் உள்ள தகிசாரில் தண்டவாளத்தில் இறங்கிய பயணி, ரயில் வரும்போது விரைந்து நடைமேடையில் ஏற முயன்ற போது அவரைக் காவலர் ஒருவர் விரைந்து காப்பாற்றியுள்ள சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை தகிசார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்தபோது பயணியின் காலணி கழண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து, அவர் அதை மீண்டும் மாட்டிக்கொண்டு வருவதற்குள் அருகில் ரயில் வந்துவிட்டது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் நடைமேடையில் ஏறி உயிர்தப்பினார். அப்போது காவலர் ஒருவர் அவருக்குக் கைகொடுத்துக் கரையேற்றினார். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
#WATCH | Maharashtra: A constable of Mumbai Police helped a 60-year-old man, who got stuck at a railway track, save his life at Dahisar railway station in Mumbai yesterday. pic.twitter.com/lqzJYf09Cj
— ANI (@ANI) January 2, 2021