தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ல் வெளியாகவுள்ளது. இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபி நாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அபர்ணா முரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் என மேலும் சிலர் நடித்துள்ளனர். எதிர்ப்புகளுக்கு நடுவே தான் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் வருமானத்தில் குறிப்பிடத்த தொகையை சூர்யா சினிமாவை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் நலனுக்காக கொடுத்து உதவினார். இப்படம் உருவான கதை தயாரிப்பு நிறுவனத்தால் யூடூப்பில் வெளியிடப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்த்துள்ளனர். யூடூப்பில் தற்போது டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.
Grateful for all the love you’re showering. We are now #1 trending! #SooraraiPottruhttps://t.co/dKr3CxnAcv@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @deepakbhojraj @jacki_art @guneetm @sikhyaent @SuperAalif @aachinjain pic.twitter.com/9yAcGBIqDL
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 11, 2020