அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் நடிகை அஞ்சலி. இப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது. அங்காடித் தெரு திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

அதன்பின்னர் தூங்க நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன் என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக அவர் பெரும் கைதட்டல்களைப் பெற்றார். இயக்குனர் ராமின் தரமணியில் இவரின் கதாபாத்திரம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
மேலும் சமீபத்தில் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பேரன்பு படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வந்த நடிகை அஞ்சலி தற்போது துளி கூட மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.
And wen all the glitter fades there’ll still be stardust in her veins.. #happy #weekend #saturday pic.twitter.com/GJo5pGPDWW
— Anjali (@yoursanjali) August 1, 2020