சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த தமிழர்களைக் கவர்ந்தவர்கள் தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் தான் டைட்டில் வின்னர் ஆனார். கொரோனா காலங்களில் அதிகமாக அரங்கேறிய குடும்ப வன்முறைகளுக்கு இவர்கள் கொடுத்திருந்த பேட்டி அனைவராலும் பேசப்பட்டு வந்தது.

ஆம் இவர்கள் எப்பொழுதும் பிரியாமல் ஒன்றாக இருந்துவருவதாகவும், தங்களுக்குள் சண்டை என்று வந்ததே இல்லை என்றும் இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டோடு இருக்கும் கணவர்களுக்கும் மனைவிகளுக்கு அதிகமான சண்டை அரங்கேறி வருவதை ஒரே வார்த்தையில் விட்டுக்கொடுத்து சொன்றால் சண்டை என்பதே இல்லை என்று கூறினார்கள். இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சூப்பர்சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி அண்மையில் படு பயங்கர மார்டன் உடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். இது குறித்த காணொளிகள் வைரலாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு அறிவுரை கூறும் விதமாக கருத்து வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது எந்த ஒரு ஓவர் மேக்கப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.