பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. வித வித வீடியோக்கள் எல்லாம் இவருக்காக வெளிவந்தது, அந்த அளவிற்கு ரசிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது. ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். லாஸ்லியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தினம் தினம் ஒரு போட்டோ ஷுட் தான். இப்போது அவர் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார், முதன் முதலாக அவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.