முன்பெல்லாம் குழந்தைகள் வெளியில் போய் அடிக்கடி விளையாடி வந்தனர். ஆனால் இப்போது சதா சர்வநேரமும் செல்போனே கதி எனக் கிடக்கிறார்கள். ஏற்கனவே வயது வித்யாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி இருக்கும் நிலையில் இப்போது ஒரு பூனையும் அதில் சேர்ந்து இருக்கிறது. ஆம், ஒரு வீட்டில் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வருகின்றனர். அந்தப் பூனைக்கும் மனிதர்களைப் போல அவ்வப்போது செல்போனை போட்டுக் கொடுத்து பழக்கியிருக்கின்றனர். இந்நிலையில் அந்த பூனையோ யாராவது செல்போனில் வீடியோக்கள் போட்டுக் கொடுத்தால் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறது. யாராவது செல்போனை அதனிடம் இருந்து எடுத்தால் செம காண்டாகி விடுகிறது. இதோ அந்த வீடியோவில் நீங்களே பாருங்கள்…
மனிதர்களைப் போல செல்போனுக்கு அடிமையான பூனை!! செல்போனை வாங்கினால் எவ்வளவு கோவம் வருதுன்னு பாருங்க..!
