திருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர்பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்தபாலசுப்பிரமணி (50) என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் நைட் டியூட்டிக்கு சென்ற பாலசுப்பிரமணி, அங்கிருந்த பெண் பொலிஸிடம்பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பெண் போலீஸை கட்டி முத்தமிட்டுசில்மிஷத்தில் ஈடுபட்டார். இது அந்த பெண் பொலிஸின் சம்மதத்துடனே இந்தச் சம்பவம்நடந்துள்ளது. அப்போது திடீரென உளவுத்துறைபொலிஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்தார். அங்கு நடந்துகொண்டிருந்த அசிங்கத்தைபார்த்து சத்தம் போட்டார்.
இதனால் அதிர்ந்துபோன பெண் பொலிஸ், சப் இன்ஸ்பெக்டர் தான்வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து அந்த எஸ்.ஐசஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பெண் பொலிஸின் சம்மதத்துடனேஇது நடைபெற்றதாக கூறினார். பின்னர் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இதனால் அந்த பெண் பொலிஸிடமும் விசாரணை நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்டேஷனில் வைத்து காவலர்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.