பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 5-ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. அங்கிருந்து கூட அவர் நலமுடன் தான் சமூக வலைத்தளத்தில் பேசினார், ஆனால், தற்போது அவரின் உடல்நிலை கொஞ்சம் மோசமாகியுள்ளது. எஸ்.பி.பி தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர், ரசிகர்களும் தங்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.பி நண்பரும் இசையமைப்பாளர் இளையராஜா உடைந்த குரலில் கண் கலங்கியப்படி வெளியிட்ட வீடியோ எல்லோரையும் கலங்க வைத்துள்ளது, இதோ…
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்காக கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட இளையராஜா…
