பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், நேற்றைய தினத்தில் ஷிவானி க ண் ணீ ருட ன் வி டை பெற்றார். இந்நிலைியல் உள்ளே 6 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவிருக்கும், தற்போது பிக்பாஸ் கொடுக்கும் பணத்தினை எடுத்துக்கொண்டு செல்வது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கமல் கவினுக்கு ஆட்டத்தை மாற்றியவர் என்ற அவார்டு கொடுத்தார். காரணம் கவின் இருந்திருந்தால் அவர்தான் பிக்பாஸ் டைட்டிலை வென்றிருப்பார் என்பதே. அதே போன்று இந்த ஆண்டும் ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு போட்டியாளர்கள் எவரேனும் வெளியேறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஆரி மக்களை சந்திப்பதற்கு தயார் நிலையில் இருப்பதால் அவர் எடுத்துச்செல்ல மாட்டார் என்றும், கேபி மற்றும் ரம்யா எடுத்துச்செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. காரணம் ரம்யா தானாக தான் வெளியே வந்தேன் என்று ரசிகர்களிடம் பெயர் வாங்குவதற்கு நினைப்பார் என்றும் கேபி ஆரி தான் டைட்டில் வின்னர் என்ற உறுதியான நினைப்பில் இருப்பதால் அவர் எடுத்துச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.