நாட்டில் பல விதமான சம்பவங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியாகி நம் அனைவராலும் காணப்பட்டு வருகிறது. சில சம்பவங்கள் நம்மளை மிகவும் சோகமாக மாற்றி விடுகிறது. மனிதர்களின் கடுமையான நடத்தை நம்மை அவர்கள் மீது வெறுப்பு வர செய்கிறது. அது போன்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அது,குருணாகல், நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது 3 கிராம பெண் ஊழியர்கள் மோசமாக தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த 3 பெண் ஊழியர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்பு அந்த 3 கிராம பெண் ஊழியர்களையும் பினைகைதிகளாக வைத்து உள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊர் மக்கள் அந்த மூன்று கிராம பெண் ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்க சொல்லி போராட்டம் நடத்தினர்.
மேலும் அந்த மூவரையும் வரும் 16 ஆம் தேதிவரை பிணைக்கைதிகளாக காவலில் வைக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.