மைனா படத்தில் நடித்த நடிகையை, வில்லன் நடிகர் ஒருவர் அவரது அறைக்கே சென்று கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழில் மதுராஜ் இயக்கத்தில் ப்ரித்விராஜன், வீணா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தொட்ரா. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எம்எஸ் குமாருக்கு மனைவியாக சின்னதிரையில் பிரபலமான நடிகை சூசன் நடிக்கிறார் .

இந்நிலையில் படத்தில் சூசனை எம்.எஸ் குமார் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் குமாரோ பெண்களை விளையாட்டுக்கு கூட நான் அடிக்க மாட்டேன் என்று சூசனை அறைய தயங்கியுள்ளார்.
இந்நிலையில் இதனைப் புரிந்துகொண்ட சூசன் இயக்குனரை ,எம்.எஸ் குமாரை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார் .இந்நிலையில் இரவு 10 மணியளவில் மதுரராஜ், எம் எஸ் குமாரும் சூசன் அறைக்கு சென்றுள்ளார் . அங்கு சூசன் எம்எஸ் குமாரிடம் நீங்கள் என்னை நிஜமாகவே கன்னத்தில் அறைந்தால் தான் அந்த காட்சி நன்றாக வரும் எனக்கூறி கன்னத்தில் அறைந்து பயிற்சி எடுக்க கூறியுள்ளார் .
அவர் வேண்டாம் என்று கூறியும் நிஜமாக அறைந்தால்தான் இந்த அறையை விட்டு செல்ல முடியும் என கட்டாயப்படுத்தியதால் கோபமடைந்த குமார் சூசனை பளாரென அறைந்துள்ளார்.இதனால் வலியால் துடித்த போதும் அதை பொருட்படுத்தாது சூசன் நாளை படப்பிடிப்பில் இதேபோல் அறையவேண்டும் என்று குமாரிடம் கூறியுள்ளார் .
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் மீண்டும் எம் எஸ் குமார் டேக் வாங்கி கொண்டே இருந்ததால் பயிற்சி செய்தும் இப்படி செய்கிறீர்களே என்று கேட்க குமாருக்கு மீண்டும் கோபம் வந்து அவரை அறைந்துள்ளார் .இதில் சூசனின் கன்னம் வீங்கியதாக செய்திகள் வெளியானது தகவல் வெளியாகி உள்ளது இச்சம்பவம் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .