ரிக்க்ஷா மாமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். அதன் பின்னர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குழந்தை பிறந்த பிறகும் கொள்ளை அழகுடன் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் உள்ளார்.

அண்மைய காலமாக கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பட வாய்ப்பை கைப்பற்றதான் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு வருவதாக கிசுகிசுத்து வருகின்றனர். இதேவேளை, தமிழில் இவர் கடைசியாக நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நடித்தார்.
இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார். தற்போது அவருக்கு மீண்டும் திரைப்பட ஆசை வந்து விட்டது போல இருக்கிறது. பொருத்திருந்து பார்க்கலாம் வனிதாவின் தங்கை சினிமாவில் நடிக்க மீண்டும் வருவாரா என்று.