80 மற்றும் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகர் சுகன்யா. நடிப்பை தாண்டி, பரதநாட்டிய கலைஞர், மியூசிக் கம்போஸர், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என பல துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். சுகன்யா திரைப்படத் துறையில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் சின்ன கவுண்டர், செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், மகாநதி, கேப்டன், இந்தியன், சேனாதிபதி ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள் ஆகும். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ராமர் கோவில் திருவிழாவில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் தம் வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் நேரடியாக ராமர் கோவில் பிரதிஷ்டையைப் பார்த்து விளக்கேற்றி வைத்து வழிபட்டனர். பிரபல நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமரின் உருவத்தை பொட்டாக வைத்துள்ளார். இவரது போட்டோ சமூக வலைதளங்ட்களில் வைரல் ஆகி வருகிறது.
Jai Shri Ram ??⛳️Lets meditate on ShriRam?? pic.twitter.com/bORpXUIMmP
— sukanya (@SukanyaActor) August 5, 2020