நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்த விவகாரத்தில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் சூரி. இந்த நிலையில் அவர் சென்னை அடையாரில் உள்ள கா வல் நி லையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.அதில், 2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்த எனக்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது.இந்த படம் விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவானது.
சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதில் விஷ்ணுவிஷாலின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.புகாரையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வி சாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.