விஜய் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இத்தொடரில் வரும் கதிர், முல்லை, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் கவனிக்கப்படும் வகையில் பிரபலமாகி இருப்பவர் கதிர் என்கிற குமரன். ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.
இத்தொடரின் மிக பெரிய வெற்றிக்கு காரணம் கதிர் முல்லையின் காதல் காட்சிகளே என்று சொல்லலாம். குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் குமார் மற்றும் அவரது மனைவி சுகாசினி பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மனைவி புடவையில் செம அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம். நீங்களும் பார்க்க அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram