பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்த் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். தமிழ் சினிமாவில் துருவாங்கல் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான ரோஜா தொடரில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு யாஷிகா சேலை கட்டி, நெற்றி வகிடில் பொட்டு வைத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் பொட்டு வைப்பது வழக்கம் என்பதால் யாஷிகாவின் இந்த செயலை பார்த்து அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது வதந்திகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில், இந்த புகைப்படம் அதை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள யாஷிகா, அது போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.
View this post on Instagram