சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டும் வரும் செய்தி பிக் பாஸ் தர்ஷன் மற்றும் அவருடைய காதலியான சனம் ஷெட்டி இவர்களை பற்றி தான். நெறய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும்பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதன்பிறகு பிக்பாஸ் சென்ற அவர் வெளியில் வந்த பிறகு திருமணம் செய்ய மறுக்கிறார் என சனம் ஷெட்டி குற்றம் சாட்டி வருகிறார். அவருக்காக 15 லட்சம் வரை பண உதவி செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால் தர்ஷன் அளித்துள்ள பேட்டியில் நிச்சயதார்த்தத்தை மறைக்க சொன்னது சனம் தான் என்றும், அவர் பிகினியில் அளித்த பேட்டி தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார். பிக்பாஸ் தர்ஷனுக்கும் அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் இடையேயான பி ரச் சனை,
போலீஸ் மற்றும் மீடியாவில் வந்ததால் பொதுவெளியில் வந்து பரபரப்பாக பேசப்படுகிறது.இந்நிலையில் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் அளித்துள்ள பேட்டியில் தர்ஷனுக்கு 7 வருடம் வரை த ண்ட னை கிடைக்கும் என கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான கு ற்ற ங்கள் மற்றும் பணம் வாங்கி ஏமாற்றியதற்காக இந்த தண்டனை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.