கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை முடித்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக்டாக் செயலியை பொழுது போக்குக்காக பயன்படுத்தி பிரபலமடைந்தவர். பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி சேவை செய்து வருகிறார். இவரை சர்வதேச ஊடகமொன்று நேர்காணலெடுத்து பாராட்டியுள்ளது.
டிக்டாக் பிரபலம் தீபிகா வெங்கடாசலம் செயலை பாராட்டிய சர்வதேச ஊடகம்!! அப்படி என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க
