ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என திரையுலக பட்டாலேமே நடித்து 2013ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் தான் ராஜா ராணி. இப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு காரணம் கதைக்களம் தான் காதல், நகைச்சுவை, ப்ரெண்ஷிப், அழுகை அனைத்தையும் கொண்டு ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தது. இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.

இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி. இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் பகுதியில் நயன்தாரா ஜெய் காதல் கதையும் அதன் பின்னர் ஆர்யா நஸ்ரியா காதல் கதையும் இறுதியில் ஆர்யா நயன்தாரா சேரும் காட்சிகள் இடம் பெற்றன. இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார்.
இந்நிலையில் ராஜா ராணி படத்தில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு பதிலாக முதலில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக ஆர்யா நடித்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.