தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சந்திராமுகி, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் தனது படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் கலக்கிய இவர் பாலிவுட்டிற்கு எப்போது செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தபடியாக அவர் எப்போது திருமணம் செய்வார் என்பது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதை நாம் அறிவோம். கூடிய விரைவில் இவர்கள் இருவருக்குமே திருமணம் என பல செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் தங்களது திருமணம் குறித்து இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா தேசிய விருது வென்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்ளவேண் என முடிவுடன் இருக்கிறாராம் என தகவல்கள் கூறுகின்றன.