தமிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளரின் பாடல்கள் இன்றுவரை நம் மனதில் நிலைத்து நிற்கிறது அதற்க்கு காரணம் அவர்களின் குரல் வளம் தான். அப்படி பட்ட குரல் வளம் வாய்ந்த ஒருவர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர் ஆவார்.மலேசியா வாசுதேவன், இவர் பெயரை சொன்னதுமே சில பாடல்கள் நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் இவர். பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். பல திறமைகளை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்ற இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த வருத்தம் வாசுதேவன் அவர்களின் குடும்பத்தாருக்கு இருக்கிறது.
இவருக்கு சர்க்கரை நோ ய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காய ம் ஆறாமல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடுமையாக சிகி ச் சை அளித்தும் அவர் பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு இந்த மண்ணை விட்டு விடைபெற்றார். அவர் சென்றாலும் அவர் குரலும் அவர் பாடிய பாடல்களும் என்றும் நம் மனதில் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.