சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ரேகா கிருஷ்ணப்பா ஒரு முக்கியமாண கதாப்பதிரமாகும். வாணி போஜனுக்கும் அன்னியாருக்கும் இடையிலான வாதம் சீரியலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதியாக இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீலி சீரியலிலும் ரேகா கிருஷ்ணப்பா நடித்தார். அவர் ராதா கல்யாணா, கிருஷ்ணா ருக்மிணி மற்றும் மாயாமோகினி ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.
இருப்பினும் அவரின் முக்கிய கதாப்பதிரமானது தெய்வமகள் சீரியலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மக்களின் முன் நிறுத்தியது, இந்த தொடர் என்பது அனைவருக்கு தெரிந்த உண்மையாகும் .இந்ததொடரில் இவரின் கதாப்பாத்திரம் பார்த்து இவரை வேருக்காதோர் எவரும் இல்லை. ஆனால் உண்மையில் இவர் மிகவும் சாதுவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.