தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்தர நடிகர் தலைவாசல் விஜய். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தலைவாசல் விஜய் ஒரு தொலைக்காட்சி நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். அவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த முடிவு செய்த படக்குழுவினர் அதற்காக சமீபத்தில் அங்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் தலைவாசல் விஜய்யும் கிளம்பி சென்றார்.

கொரோனா அச்சத்துக்கு இடையே லண்டனில் உள்ள தலைவாசல் விஜய் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றது வித்தியாசமான மற்றும் தனித்துவமான அனுபவமாக இருந்தது. விமான நிலையத்தில் ஒருவர் கூட எங்களை வரவேற்க வரவில்லை. முழு விமான நிலையமும் பிபிஇ சூட்ஸுடன் பயோ வார் மண்டலத்தில் இருப்பது போன்று உள்ளது.
நாங்களே எங்களுடைய லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு சென்றோம். மேலும் ஒவ்வொரு நடிகரும் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், படப்பிடிப்பிற்கு முன்னர் முழு அளவில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.