நம் முன்னோர்கள் யானைக்குப் பலம் தும்பிக்கையில் என்றால் மனிதர்களுக்குப் பலம் நம்பிக்கையில் எனச் சொல்கிறார்கள். தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எந்த சூழலிலும் வாழ்வை எதிர்கொள்ள முடியும். தன்னம்பிக்கை என்கிற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் வாழ்வில் எந்த வெற்றியும் வந்து சேராது. இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு இளம்பெண் கீழே விழுந்து அறுவை சிகிட்சை செய்து இருக்கிறார். கை ஒடிந்த நிலையில் அவர் கையில் கட்டு போட்டிருக்கிறார். ஆனால் இந்த சூழலிலும் அவர் மனம் தளராமல் முக்கால பாடலுக்கு டைவ் அடித்து ஆடுகிறார். அதிலும் உடைந்த கை தரையில் படாமல், எந்த சேதமும் ஆகாமல் அந்தப் பெண் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே ஒரு நிமிடம் பாருங்கள். அசந்துப் போவீர்கள்.
இளம்பெண்ணின் அசாத்திய தன்னம்பிக்கை! கை ஒடிந்த நிலையிலும் டைவ் அடித்து நடனம்.. குவியும் பாராட்டுகள்!!
