பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை எனவே ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் யார் வெற்றி பெற போவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து, தற்போது பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது.
அதில், ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் இடம் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாரம் நடந்த பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள், அந்த எபிசோட் எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது. நேற்று நடந்த எபிசோடில் ஆரி பாலாஜி இடையே சண்டை முற்றியது.
வார இறுதி வந்துவிட்டது, எலிமினேஷன் நடக்கும். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. நமக்கு கிடைத்த தகவலின் படி ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் தப்பித்துகொண்டே இருந்த ஆஜித் இந்த வாரம் வெளியேறியதாக கூறப்படுகிறது. அதோடு அடுத்த வாரம் டிக்கெட் டு பைனல் டாஸ்க் இருக்கும் என்று கூறப்படுகிறது.