ஆல்யா மனசா பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை. விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர். இவர் இதற்கு முன்பு சில சேனல்களில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவர் ‘இல் தக்க சீயா’ என்ற இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், சஞ்சீவுடன் ‘என்னாய் மாட்ரம் கதலே’ என்ற குறும்படத்தில் தோன்றினார். சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது இவர் தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. . இதில் சில காட்சியே இதுவாகும்.