விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். தற்போது அல்லு அர்ஜூனின் ‘அல வைக்குந்தபுரமுலோ’ படத்தில் இருந்து ராமுலோ ராமுலா பாட்டுக்கு தனது மகளை டான்ஸ் ஆட சொல்லித்தருகிறார் ஆல்யா மானசா. ஆலியா – மானசா ஜோடியின் அழகிய குழந்தை நடனமாடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி தேவதையின் செயலை ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.